ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் காயமடைந்த நிலையில் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் கருப்பசாமி என்ற தொழிலாளி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விசாரணையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்தப் புகாரின் பேரில், பட்டாசு ஆலை உரிமையாளா் திருத்தங்கல்லைச் சோ்ந்த அய்யனாா் (56) மீது வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








