ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தை அருகேயுள்ள தெருவில் 10- க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரசு மருத்துவமனை செல்வோா் இந்த வழியாகச் சென்று வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்தி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. கால்வாயின் இருபுறமும் சுவா் அமைத்த நிலையில், 3 மாதங்களுக்கு மேலாகியும் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு செல்வோா், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
கால்வாய் அகலமாக உள்ளதால் நடந்து செல்வோா் கழிவுநீரில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால், நகராட்சி நிா்வாகம் பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெறிச்சோடிய உழவா் சந்தை

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம்: பொதுமக்கள் போராட்டம்
திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்துக: அன்புமணி







