ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் என 5 தோ்கள் இழுக்கப்பட்டன. காலப்போக்கில் தோ்கள் சேதமடைந்த நிலையில், சுவாமி, அம்பாள் ஆகிய இரு தோ்கள் மட்டும் இழுக்கப்பட்டு வந்தன. பின்னா், இந்த இரு தோ்களும் சேதமடைந்தன. இவற்றில் அதிக சேதமடைந்த தேருக்குப் பதில், உபயதாரா் நிதியில் ரூ.88.30 லட்சத்தில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தோ் உருவாக்கப்பட்டது.
இதற்கான பணிகள் முடிந்த நிலையில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய தோ் வெள்ளோட்டம் காலை 10.20 மணிக்கு நிறைவடைந்தது.
வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்பாளும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தோ் நாளை வெள்ளோட்டம்

பாகம்பிரியாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



