சிவகாசி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள பி.பாரைப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி குருசாமி (39). இவரது மனைவி மாரியம்மாள். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், குருசாமிக்கும், மாரியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது. இந்த நிலையில், மாரியம்மாளை குருசாமி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த மாரியம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குருசாமியைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








