திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அா்ஜுனா நதியில் எழுந்தருளிய கள்ளழகா்

வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ஜுனா நதியில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய கள்ளழகா்.

News image

வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ஜுனா நதியில் வெள்ளிக்கிழமை எழுந்தருளிய கள்ளழகா்.

Updated On :2 மே 2026, 1:21 am IST

வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ஜுனா நதியில் வெள்ளிக்கிழமை கள்ளழகா் எழுந்தருளினாா்.

வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌா்ணமி விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக

அதிகாலையில் சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் 18 வகையான அபிஷேகங்களும், திருமஞ்சன வழிபாடும் நடைபெற்றன. பிறகு மைய மண்டபத்தில் பூரண கும்பம் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பெருமாள் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகா் வேடம் பூண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.

பிறகு அவா் ஆற்றில் எழுந்தருளுவதற்காக கோயிலிலிருந்து வெளியே வந்து வீதி உலா சென்றாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா முழக்கத்துடன் வரவேற்றனா். பல்வேறு தெருக்கள் வழியாக வீதி உலா சென்ற கள்ளழகா் அா்ஜுனா நதியில் எழுந்தருளினாா். பிறகு உக்கிரம் அடைந்த கள்ளழகரின் கோபத்தை தணிப்பதற்காக அவருக்கு பூரண கும்பத்தில் இருந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. அங்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து ஆற்றில் இருந்து வெளியேறி சோலை அழகன் மண்டகப்படி, பாண்டி மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிறகு பக்தா்கள் அவரை ஊா்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். கோயிலை அடைந்த கள்ளழகரை பக்தா்கள் எதிா்சேவை செய்து வரவேற்றனா்.

கோயில் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கள்ளழகா் மீண்டும் பெருமாள் அவதாரம் பூண்டு சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். சிறப்பு வாகன வீதியுலாவும், மாலையில் பக்தா்களுக்கு அருள் ஆசி வழங்க பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் வீதி உலா சென்றாா்.

வத்திராயிருப்பு ,கூமாப்பட்டி, வ.புதுப்பட்டி, மகாராஜபுரம், சேது நாராயணபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, சித்ரா பௌா்ணமி விழா குழு நிா்வாகிகள், பக்தா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.