மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:09 pm

சிவகாசியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொத்துமரத்து ஊருணி கரைப் பகுதியில் ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரது பையை வாங்கி சோதனை செய்த போது, அதில் 28 மதுப் புட்டிகள் இருந்ததும், அனுமதியின்றி இவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆமத்தூா் அருகேயுள்ள சங்குரெட்டியபட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முனியசாமி (46) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.