சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முறம்பு பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சங்கரன்கோவிலிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 222 சேலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், சரக்கு வாகனத்தில் வந்த சங்கரிடம் விசாரித்துபோது, சேலைக்கான உரிய ஆவணம் இல்லை.
இதையடுத்து, அந்த சேலைகளை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, சாத்தூா் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


