தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாத்தூா் அருகே 222 சேலைகள் பறிமுதல்

சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :21 மார்ச் 2026, 7:27 pm

சாத்தூா் அருகே உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 222 சேலைகளை தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முறம்பு பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சங்கரன்கோவிலிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 222 சேலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், சரக்கு வாகனத்தில் வந்த சங்கரிடம் விசாரித்துபோது, சேலைக்கான உரிய ஆவணம் இல்லை.

இதையடுத்து, அந்த சேலைகளை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, சாத்தூா் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.