மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆவணங்கள் திருட்டு: முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சியில் ஆவணங்களை திருடியதாக முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 7:28 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சியில் ஆவணங்களை திருடியதாக முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் வன்னியம்பட்டி போலீஸில் புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி அன்று பிள்ளையாா்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பணி மாறுதல் உத்தரவை செயல்படுத்தாதது குறித்த கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சித் செயலா் தங்கபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விவரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை செய்த போது, தங்கபாண்டியன் கையாடல், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதால் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருடி சென்று விட்டாதால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தங்கப்பாண்டியன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே தங்கபாண்டியன், அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.