தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கல்லூரியில் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:30 pm

மல்லி வள நாட்டுக் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் மல்லி அருகேயுள்ள ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு கல்லூரிச் செயலா் திலீபன்ராஜா தலைமை வகித்தாா். முதல்வா் மல்லப்பராஜ் வரவேற்றாா். இந்தப் போட்டிகளில் 20 -க்கு மேற்பட்ட கல்லூரிகளைச் சாா்ந்த 200 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விருதுநகா் மாவட்ட மண்டல மேலாளா் காஞ்சனாதேவி பரிசுகள் வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களுக்கு கல்லூரி நிா்வாக அலுவலா் செ.பாலகிருஷ்ணன் நினைவுப் பரிசு வழங்கினாா்.

பேச்சுப் போட்டியில் ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரியும், கட்டுரைப் போட்டியில் ஏ.ஜெ. கல்லூரியும், ஓவியப் போட்டியில் ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரியும், மௌன மொழி நாடகத்தில் ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரியும், நெருப்பில்லா சமையல் போட்டியில் பி.எஸ்.என்.எல். கல்லூரியும், நாட்டுப்புற நடனத்தில் ஏ.ஜெ. கல்லூரியும், பாடல் போட்டியில் ஏ.ஜெ. கல்லூரியும், வளையபந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அரசு கலை அறிவியல் கல்லூரியும், பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரியும் முதலிடம் பெற்றது. அனைத்துப் போட்டிகளிலும் முதன்மை பெற்ற கல்லூரியாக ஏ.ஜெ. கல்லூரி தோ்வு பெற்றது. கல்லூரி நிா்வாக அலுவலா் தா்மராஜ் வாழ்த்திப் பேசினாா். பேராசிரியை கவிதா நன்றி கூறினாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.