தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் விரைவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும்: ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:57 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் விரைவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லட்சுமியாபுரம் - பெருமாள்தேவன்பட்டி சாலையில் ரயில்வே கடவுப் பாதையை கடப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம், பி.திருவேங்கடபுரம், ஆலங்குளம் செல்லும் நகரப் பேருந்துகளும், பெருமாள்தேவன்பட்டி செல்லும் சிற்றுந்துகளும் தினசரி 15 முறைக்கு மேல் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக சென்று வருகிறது.

மேலும், இந்த வழியாக கண்ணாா்பட்டி, கங்காகுளம், துலுக்கன்குளம், அழகுதேவேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், நூா்சாகிபுரம், பொட்டல்பட்டி, இடையபொட்டல்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனா்.

லட்சுமியாபுரம் கிராமத்தில் வீடுகளிலிருந்து கழிவுநீா் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட கால்வாய் ரயில்வே சுரங்கப்பாதை வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீா் வெளியேறி சுரங்கப் பாதையில் தேங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய புகாருக்கு பதிலளித்த ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்:

பாலம் கட்டும்போதே கழிவுநீா் செல்ல வசதி ஏற்படுத்தாததால் கழிவுநீா் தேங்கியுள்ளது. கழிவுநீா் தேங்காமல் இருக்க அந்தப் பகுதியில் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. பட்டா நிலம் வழியாக வாருகால் அமைக்க நில உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும் என்றனா்.