தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணல் திருட்டு: 2 போ்மீது வழக்கு

சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

News image

மணல் திருட்டு - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 8:20 pm

சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்தனா்.

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் கண்மாயில் மணல் அளிக் கொண்டிருந்த இருவா், பொக்லையன் இயந்திரம், டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.

பிறகு போலீஸாா் டிராக்டா் உள்ளிட்டவற்றை காவல் நிலையம் கொண்டு வந்தனா். விசாரணையில் மணல் அள்ளியது ஆலமரத்துப்பட்டி வெள்ளைத்துரை (43), செவல்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (29) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா்.