டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக பாஜக நிா்வாகி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 2:59 am IST

சாத்தூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் வைத்திருந்த பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தாயில்பட்டி சத்யாநகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (38). இவா் பாஜகவின் உள்ளாட்சிப் பிரிவு மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்த நிலையில் இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை வெம்பக்கோட்டை போலீஸாா் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் பதுக்கி வைத்திருந்த 47 பண்டல் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகரஜை கைது செய்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகையிலைப் பொருள்கள் விற்ாக நாகராஜ் கைதான நிலையில் தற்போது மீண்டும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.