விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 4. 5 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள கீழவரகுணராமபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாருக்கு (40) ஜெயக்குமாா் என்பவா் மூலம் கீழராஜ குலராமன் வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்ன மாடசாமி அறிமுகமானாா்.
இவா், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, ரூ. 4.5 லட்சத்தை கொடுத்தாா். இதையடுத்து, சின்னமாடசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தளவாய்புரம் காவல் நிலையத்தில் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக இளைஞா் மீது வழக்குப் பதிவு
பண மோசடி: கூட்டுறவு சங்க செயலாளா் மீது வழக்குப் பதிவு
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 போ் கைது








