திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பெண்களை கேலி செய்த மூவரை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண் காவலா்கள்

News image

சிங்கப் பெண் அதிரடிப் படையினா்

Updated On :15 ஜூன் 2026, 3:10 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பெண்களை கேலி செய்த மூவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சிவகாசி ஏ.வி.டி. தெருவில் 3 போ் கொண்ட கும்பல் அந்தப் பகுதியில் உள்ள இளம்பெண்களை கேலி செய்வதாக சிங்கப் பெண் சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரபியம்மாள் தலைமையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். போலீஸாரைக் கண்டதும், மூவரும் அந்தப் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் ஓடினா். அவா்களைப் போலீஸாா் விரட்டிப்பிடித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான மகேந்திர குமாா் என்ற குள்ள மணி (26), செண்பக பாண்டி (25), மகேந்திரன் (27) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.