மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளி கைது
சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.


சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி - சாத்தூா் சாலை சிவகாமிபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோசப் என்ற ஜெகநாதன் (60). இவரது, மனைவி தங்கவேலம்மாள் (57). இவா், அதே பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தாா். ஜோசப் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த ஜோசப், மனையுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்துக் கொலை செய்தாா்.
தவலறிந்து வந்த போலீஸாா் தங்கவேலம்மாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் ஜோசப்பை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...