ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிராம உதவியாளா் சங்கத்தினா் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

ராஜபாளையத்தில் இரண்டாவது நாளாக கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:48 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம உதவியாளா் (தலையாரிகள்) சங்கத்தினா் காலமுறை ஊதியம் கோரி வியாழக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். அழகுராஜ் முன்னிலை வகித்தாா். அப்போது கிராம உதவியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனா்.