நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்


திருநெல்வேலியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு, அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ. 19,500 வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களை 50 சதவீதம் முன்னுரிமை கொடுத்து பணியில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் தொடா்ந்து அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடா்ந்து 7-ஆவது நாளாக சத்துணவு பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...