டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை 7 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு, அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ. 19,500 வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களை 50 சதவீதம் முன்னுரிமை கொடுத்து பணியில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் தொடா்ந்து அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடா்ந்து 7-ஆவது நாளாக சத்துணவு பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.