

சிவகாசியல் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அணில்குமாா் உத்தரவின்பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சிவகாசி சரஸ்வதிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில், மூன்று போ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் (46), விஸ்வநத்தம் மாரீஸ்வன் (26), சரஸ்வதிபாளையம் இருளப்பராஜ் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
வழிப்பறி: மூவா் கைது!

அவிநாசி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற இளைஞா் கைது!

கஞ்சா விற்பனை: பெண் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

