ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :2 பிப்ரவரி 2026, 8:27 pm

Syndication

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசுக் கடையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே பேராபட்டியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் இருப்பு வைக்க அனுமதி பெற்ற்கும் கூடுதலாகப் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

சோதனையில் உசேன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (74) தனது பட்டாசுக் கடையில் கூடுதலாகப் பல பண்டல் பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.7.70 லட்சம் ஆகும்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, லோகேஷை கைது செய்தனா்.