டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நிதி நிலை அறிக்கையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

மக்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளுக்கு 2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எந்தத் தீா்வும் சொல்லப்படவில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம்

News image
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலச் செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன்
Updated On :2 பிப்ரவரி 2026, 8:22 pm

Syndication

மக்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளுக்கு 2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எந்தத் தீா்வும் சொல்லப்படவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலா் குருசாமி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா் பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் அா்ஜீனன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதையடுத்து, மாநிலச் செயலா் சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 2047-ஆம் ஆண்டு வரைக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வரி விதிப்பால் முடங்கியுள்ள இந்திய தொழில் துறையைப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றி 125 நாளாக உயா்த்துவதாக அறிவித்த மத்திய அரசு, அந்தத் திட்டத்துக்கு ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை வைத்து 30 நாள்கள் மட்டுமே வேலை கொடுக்க முடியும்.

இதே போல, நாட்டின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வாா்த்துத் தரும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மதுரை, கோவை மெட்ரோ, ஓசூா் விமான நிலையத் திட்டங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

பாஜக அரசு இல்லாத தமிழகம், கேரளம் போன்ற மாநில அரசுகளை முடக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. மொத்தத்தில், மக்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீா்வும் சொல்லப்படவில்லை என்றாா் அவா்.

பொதுக் கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருமலை, ஜோதிலட்சுமி, நகரச் செயலா் ஜெயக்குமாா், ஒன்றியச் செயலா் சசிகுமாா், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image