பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பி.ஏ.சி.ராமசாமிராஜா சிலைக்கு மரியாதை

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் ராம்கோ குழும நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு ஜோதியை வழங்கிய ராம்கோ குழுமத் தலைவா் பி. ஆா். வெங்கட்ராமராஜா.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:52 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ குழும நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 132-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையொட்டி, பி. ஏ.சி.ஆா். நினைவிடத்தில் கீா்த்தனாஞ்சலி, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், சொக்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, நினைவு தொடா் ஜோதியை ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ராமமந்திரம், பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தென்காசி சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் ஸ்ரீ ரித்விக்ராஜாவின் கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.