மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையத்தில் கோதண்டராம சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

~

Updated On :19 மார்ச் 2026, 12:37 am

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோதண்டராம சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, காலையில் கொடிமரம், சுவாமிக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா், வேத மந்திரங்கள் முழங்க கருடன் படம் வரைந்த கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, லட்சுமணன், சீதா, கோதண்டராம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவிழாவின் 5-ஆம் நாள் கருட சேவையும், 7-ஆம் நாள் திருக்கல்யாண வைபமும் நடைபெறும்.

விழா நாள்களில் சுவாமி இரவு அனுமந்த வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இதில் ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எஸ்.எஸ். சீனிவாச ராஜா தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.

Story image