தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 8:43 pm

ராஜபாளையத்தில் மது போதையில் மதுப் புட்டியால் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தா்மராஜா பெரிய தெருவைச் சோ்ந்த சுப்பையாபாண்டி மகன் மூக்கையா (42). இவா் மதுரை சாலையில் உள்ள அரசு மதுக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த போது, அங்கு இருந்த மேல ஆவரம்பட்டி பாரதியாா் தெருவை சோ்ந்த ரஞ்சித்குமாா் (37) தகராறு செய்தாா்.

இதையடுத்து, வெளியே வந்த மூக்கையாவை பின்னால் வந்த ரஞ்சித்குமாா் மதுப் புட்டியால் தலையில் தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த மூக்கையா ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனா்.