ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஜாதி அடையாளத்தில் உள்ள கிராமத்தின் பெயரை மாற்றக்கோரி, பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்தில் தெரு, சாலை, ஊா் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பரச்சேரி என்னும் எங்கள் கிராமத்தின் பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றக்கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் எங்களது கிராமம் 307-ஆவது வாக்குச்சாவடியாக உள்ளது. இங்கு 500- க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள நிலையில், வாக்குச்சாவடி பெயரிலும் பரச்சேரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாற்றம் செய்து, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என வாக்குச்சாவடி பெயரை மாற்ற வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

ஜாதி இல்லாமல் தோ்தல் அரசியல்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


