முதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான். அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றிபெற்றது மட்டுமின்றி, கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தனது படைபலத்தை நிரூபித்தான்.
சோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர், வணங்கினர் என்பதற்கு அவர்கள் படைத்த கோயில்களில் துர்க்கைக்கு அவர்கள் அளித்த இடமும் மற்றும் காளிக்கு கோயில் எடுப்பித்ததும் அதனை நன்கு வெளிப்படுத்துகிறது.
உயர்ந்த பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக கிராமங்களிலும் ஆலமரத்தினடியிலும் துர்க்கையம்மன் சிற்பங்கள் வைத்து வழிபட்டு வந்துள்ளதை ஆங்காங்கே கிடைத்துள்ள சிற்பங்களைக் கொண்டு எளிதில் கூறமுடியும்.
காரணகாரியங்கள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை செம்மையுற நடத்த பெரும் துணையாக அமையும்படி புராணக்கதைகளாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது.
வரலாற்றுச் சிறப்புப் பெற்ற செப்புப் பட்டயம் ஒன்று சேகரிக்கப்பட்டது. அதில்தான், முதன்முதலாக முதலாம் ராசேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழீச்சரம் என்ற செய்தி காணமுடிகிறது.