தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

2021 வர்த்தகம்

ஜன. 1: ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:21 am

DIN

  • ஜன. 1: ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
     
  • ஜன. 5: கரோனா தொற்றால் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலையால் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) தனது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தது.
     
  • மார்ச் 19: முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதமாக இருந்த குடும்பங்களின் நிதிச் சேமிப்பு 2020 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10.4 சதவீதமாக சரிவடைந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
  • ஏப்.1: தொடர்ந்து 6-ஆவது முறையாக நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.
     
  • ஏப்.10:  சந்தையில் ஆதிக்கம் செலுத்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அலிபாபா நிறுவனத்துக்கு சீன ஒழுங்காற்று அமைப்பு 278 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000 கோடி) அபராதம் விதித்தது.
     
  • மே 25: எண்ம (டிஜிட்டல்) ஊடக நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளுக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
     
  • ஜூன் 12: வாராக் கடன்களைக் குறைத்துக் காட்டும் வகையில் இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தன.
  • ஜூலை 17: "ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை ரூ.5,710 கோடிக்கு கையகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் அறிவித்தது.
     
  • செப்.29: திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து விட்டதாக பிரமல் எண்டர்பிரைசஸ் அறிவித்தது.
     
  • நவ.18: முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேடிஎம் பங்குகள் மும்பை 
  • மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. ஆனால், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி மும்பை பங்குச் சந்தையில் பேடிஎம் பங்குகளின் விலை 27 சதவீதம் சரிவடைந்து ரூ.2,150-லிருந்து  ரூ.1,564-ஆக குறைந்து நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.