

பாடல் 9
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன், உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்
ஆழிவண்ணன், என் அம்மான், அம் தண் திருமாலிருஞ்சோலை,
வாழி மனமே, கைவிடேல், உடலும், உயிரும் மங்க ஒட்டே.
ஊழி முதல்வன் (ஊழிக்காலத்துக்கு முன்பு இருந்தவன், அனைத்துக்கும் காரணமாக அமைந்தவன்) என்று போற்றப்படுகிறவன் இவன் ஒருவனே என்னும்படி தனித்துவமானவன், ஊழிக்காலம்தோறும் உலகங்களைத் தன்னுள்ளே படைத்து, காத்து, அழித்து இயங்குகிற கடல்வண்ணன், என் அம்மான், அத்தகைய பெருமானின் மலை, அழகிய, குளிர்ந்த, திருமாலிருஞ்சோலை, என் மனமே, அம்மலையை எப்போதும் எண்ணிக்கொண்டிரு, மறந்துவிடாதே, உடலும் உயிரும் மங்கினாலும் பரவாயில்லை (வேறேதும் நமக்கு முக்கியமில்லை), எப்போதும் அந்தத் திருமலையோடு ஒட்டியிரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

