சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்


பாடல் 7

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்,
தெருள் கொள் பிரமன் அம்மானும், தேவர்கோனும், தேவரும்,
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை,
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே.

முக்கண் அம்மானாகிய சிவபெருமான், எம்பெருமான் திருமாலை வணங்கி, ‘அம்மானே, அருளை ஈவாய்’ என்று கேட்கிறார், தெளிவுள்ள அறிவைக்கொண்ட பிரமனும், தேவர் தலைவனும், மற்ற தேவர்களும், இருளை விலக்கும் முனிவர்களும் திருமாலைப் போற்றுகிறார்கள், அத்தகைய எம்பெருமானின் திருமலை, மருட்சியை விலக்குகின்ற மணிமலை, திருமாலிருஞ்சோலை மலையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.