சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பாடல் 5

நண்ணா அசுரர் நலிவு எய்த, நல்ல அமரர் பொலிவு எய்த,
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலை சிறப்ப,
பண் ஆர் பாடல், இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி,
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே.

எம்பெருமான், பண்ணோடு அமைந்த பாடல்கள், இனிய கவிதைகளை என் உருவில் பாடிக்கொண்டான், தன்னைத் தானே பாடிக்கொண்டான். அந்தப் பாடல்களைக் கேட்டு, நற்செயல்களோடு பொருந்தாத அசுரர்கள் நலிகிறார்கள், நல்ல அமரர்கள் பொலிவடைந்து சிறக்கிறார்கள், மற்றவர்கள் எண்ணாத அளவுக்குப் பெருமானின் நற்குணங்களைச் சிந்திக்கும் நல்ல முனிவர்கள் மகிழ்கிறார்கள், அத்தகைய பெருமான் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிறான், அந்த அம்மானை எல்லாரும் ‘தென்னா, தென்னா’ என்று போற்றுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.