சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பாடல் 4

என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கைவிடான், ஞாலத்து ஊடே நடந்து உழக்கி,
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான், நண்ணா அசுரர் நலியவே.

எம்பெருமான், எல்லா உலகங்களும் எல்லா உயிர்களும் தானே எனும்படி நின்றான், உலகமெங்கும் நடந்து பழகி அனைத்தையும் இயக்குகிறான், நற்செயல்களோடு பொருந்தாத அசுரர்கள் நலிந்துபோகும்படி அவர்களை அழிக்கிறான், தெற்குத் திசைக்குத் திலகமாகத் திகழ்கிற திருமாலிருஞ்சோலை மலையைக் கைவிடாமல் அங்கிருந்து அருள்செய்கிறான், இத்தகைய பெருமான், என்னுடைய உடலைவிட்டு நீங்காமல் அங்கேயும் வீற்றிருக்கிறானே, எம்பெருமானின் திருவருள்தான் எப்படிப்பட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.