டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 10


பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான்,
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று,
பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு
வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.

அன்றைக்கு நரசிம்மனாக வந்து இரணியனின் உடலைக் கிழித்த பெருமான், என்னுடைய பிறவித்துயரத்தை அறுத்து, பற்றுகளை விலக்கி என்னைத் தன் அடிமையாக்கிக்கொண்டான், அவனைப் பிரியாமல் தொண்டுசெய்யும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தான். பெரியவர்களுக்கு ஆட்பட்டுத் தொண்டுசெய்கிறவர்கள், யாரும் பெறாத பயன்களைப் பெறுவார்கள்.  வரிகளையுடைய ஒளிபொருந்திய வாயைக்கொண்ட பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான், திருவாட்டாற்றுப் பெருமான் இந்த வழியை எனக்குக் காட்டினான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.