டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 8

திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருப்பவர்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:27 pm

செ.குளோரியான்


பாடல் 8

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்,
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது, புனல்
மைந்நின்ற வரைபோலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே!

எம்பெருமானின் திருமேனியிலே திருத்துளவம் கமழ்கிறது, அதன் நறுமணம் அவருடைய திருமுடியிலே ஏறுகிறது, அவருடைய கையிலிருக்கும் சக்ராயுதமானது, அவர் நினைத்த இடத்துக்குச் சென்று தீயோரை அழித்துவிட்டு அவருடைய கைக்கே மீள்கிறது, அத்தகைய பெருமான், நீர்போலவும், மை போலவும், நின்ற மலைபோலவும் திருவுருவம் கொண்டவர், திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருப்பவர், அவர் என்னுடைய நெஞ்சில் திகழ்வது ஏன்? நான் அவருக்கு என்ன நன்மை செய்துவிட்டேன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.