டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 10

அவத்தங்கள் விளையும், என் சொல் கொள், அந்தோ,
அசுரர்கள் வன் கையர், கஞ்சன் ஏவ,
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்,
தனிமையும் பெரிது உனக்கு, இராமனையும்
உவத்து இலை, உடன் திரிகிலையும் என்று என்று
ஊடு உற என்னுடை ஆவி வேம்ஆல்,
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி,
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவே.

சிவந்த கனியைப்போன்ற திருவாயைக்கொண்ட எங்கள் ஆயர் தலைவனே, நீ பசுமேய்க்கச் சென்றால் துன்பம் விளையும், நான் சொல்வதைக் கேள், அடடா, அசுரர்கள், கொடுமையானவர்கள், கஞ்சன் ஏவியபடி அங்கே வந்து திரிகிறார்கள், தவம் புரிகிற முனிவர்கள் மனம் கலங்கும்படி அலைகிறார்கள், அங்கே நீ செல்லவேண்டாம்,  நீயோ யாரையும் துணையாக அழைத்துச்செல்வதில்லை, தனியாகவே திரிகிறாய், பலராமனையாவது உடன் அழைத்துச்செல்லலாம், நீ அதையும் விரும்புவதில்லை, தனிமையையே விரும்புகிறாய், ஆகவே, அந்த அசுரர்களால் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எண்ணி என்னுடைய உயிர் வேகிறது, எம்பெருமானே, பரமபதத்தைவிட, உனக்குப் பசு மேய்ப்பதுதான் பிடித்திருக்கிறது. இது என்ன வியப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.