டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 8

அசுரர்கள் தலைப்பெயில் எவன்கொல் ஆங்கு என்று
ஆழும் என் ஆர் உயிர், ஆன் பின் போகேல்,
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும், என் கை கழியேல்,
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசி செய் நுண் இடை இள ஆய்ச்சியர், நீ
உகக்கும் நல்லவரொடும் உழிதராயே.

எம்பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லும்போது அங்கே அசுரர்கள் வந்தால் என்ன ஆகுமோ என்று என் அரிய உயிர் துன்பத்தில் மூழ்குகிறது. ஆகவே, நீ பசுக்களின் பின்னால் போகாதே, உன்மீது வைத்துள்ள ஈடுபாடும், விருப்பமும், கலவியும் உள்ளிருந்து என்னை நலியச்செய்கின்றன. ஆகவே, என்னைக் கைவிட்டுச் செல்லாதே, ஈர்க்கின்ற உன்னுடைய தாமரைபோன்ற திருக்கண்களையும், திருவாயையும், திருக்கைகளையும், பீதக உடையையும் காண்பித்துக்கொண்டு இங்கே வா, உனக்குப் பிடித்த, ஒசிந்த, நுட்பமான இடையை உடைய இள ஆய்ச்சியர்களோடு வா, அங்குமிங்கும் திரிந்துகொண்டு இங்கேயே இரு, (பசுக்களை மேய்க்கச் செல்லாதே.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.