மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 11

மின்கொள்சேர் புரிநூல் குறளாய் அகல்ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர் மின் இடையவர்க்கே.

ஒளியுடைய முப்புரிநூலை அணிந்த வாமனனாக வந்து, அகன்ற உலகத்தைத் தானமாகப் பெற்றவன், வலிமையான கள்ளன், அப்பெருமானின் திருவடிகளை வணங்கிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களை இசையோடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து இனிமையான பாடல்களும் திருவண்வண்டூரைப்பற்றியவை. இவற்றைச் சொல்லவல்லவர்கள், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுக்கு மன்மதன்போல் ஆவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.