மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 5

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஊடல்கொள்ளுதல், ஊடலைத்தீர்த்தல் ஆகியவற்றை உணர்ந்து, பிரியாமல் சேர்ந்தே மேய்கிற இளம் அன்னங்களே, கனமான வண்டல்மண்ணின்மேலே சங்குகள் சேர்கிற திருவண்வண்டூரிலே, பூக்கள் நிறைந்த, குளிர்ந்த துளசிமாலையை முடியில் சூடிய நம்பெருமானைக் காணுங்கள், கை கூப்புங்கள், எனக்காகவும் அவனைப் போற்றுங்கள்.

******

பாடல் - 6

போற்றி யான் இரந்தேன், புன்னைமேல் உறை
                                                                                      பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அம்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம்கொண்டு அருளீர் மையல்தீர்வது ஒரு வண்ணமே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) புன்னைமரத்தின்மேல் தங்கியிருக்கும் பூங்குயில்களே, உங்களை வாழ்த்திக் கெஞ்சுகிறேன், சேற்றிலே வாளை துள்ளுகிற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், ஆற்றல் நிறைந்த சக்ராயுதத்தை அழகிய கையில் ஏந்திய அமரர் தலைவன், அவனைக் காணுங்கள், என்னுடைய மயக்கம் தீர்வதற்கான ஒரு வழியைக் கேட்டுவாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.