

பாடல் - 9
மாண்பு அமை கோலத்து எம் மாயக்குறளற்கு,
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.
சிறப்பு நிறைந்த அழகையுடைய எங்கள் மாயன், வாமனன், உயர்ந்த சுடர்க்குன்றைப்போன்ற செஞ்சுடர் மூர்த்தி, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய எங்கள் காகுத்தன், ஆண்களில் சிறந்தவன், அத்தகைய பெருமானை எண்ணி, ஆபரணங்களை அணிந்த, மென்மையான மார்பகங்களைக்கொண்ட என் மகள் தன் அழகை இழந்துவிட்டாள்.
***
பாடல் - 10
பொற்பு அமை நீள்முடிப் பூந்தண் துழாயற்கு,
மல் பொரு தோள் உடை மாயப்பிரானுக்கு,
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்புடையாட்டி இழந்தது கட்டே.
அழகிய, நீண்ட திருமுடியிலே, அழகான, குளிர்ந்த துழாய்மாலையை அணிந்தவன், மல்லர்களோடு போர்செய்யவல்ல தோள்களைக்கொண்ட மாயப்பிரான், நிற்கின்ற பலப்பல உருவங்களாகவும் தானே நிற்கிற மாயன், அத்தகைய பெருமானை எண்ணி, அறிவுடையவளான என் மகள் தன் மரியாதையை இழந்துவிட்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

