/

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6

திருத்துயில் கொள்கின்ற பெருமானின்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

செ.குளோரியான்

பலபலவே ஆபரணம், பேரும் பலபலவே,
பலபலவே சோதி வடிவு, பண்பு எண்ணில்,
பலபல கண்டு, உண்டு, கேட்டு, உற்று, மோந்து இன்பம்,
பலபலவே ஞானமும் பாம்புஅணை மேலாற்கே ஓ!

பாம்புப் படுக்கையிலே திருத்துயில் கொள்கின்ற பெருமானின் பண்புகளை எண்ணிப் பார்த்தால், அவன் அணிந்துள்ள ஆபரணங்கள் பலவிதமானவை, அவனுக்கிருக்கும் பெயர்களும் பலவிதமானவை, அவனது சோதி வடிவங்களும் பலவிதமானவை, அவன் தரும் இன்பங்களும் பலவிதமானவை, அவற்றைக் கண்டு, உண்டு, கேட்டு, தொட்டு, முகர்ந்து அனுபவிக்கலாம்.

இத்தகைய பெருமான் அருள்கிற ஞானங்களும் பலவிதமானவை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.