சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3

எல்லாமாகத் திகழ்கிறவன் அவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

இலன் அது, உடையன் இது என நினைவு அரியவன்,
நிலன்இடை விசும்புஇடை உருவினன், அருவினன்,
புலனொடு புலன்அலன், ஒழிவுஇலன், பரந்த அந்
நலன்உடை ஒருவனை நணுகினம் நாமே.

எம்பெருமானிடம் அந்தப் பொருள் இல்லை, இந்தப் பொருள் உண்டு என்றெல்லாம் யாராலும் எண்ணக்கூட இயலாது, காரணம், நிலத்திலும் வானிலும் உள்ள உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் அனைத்தும் அவனே,

காணப்படுகின்ற பொருள்கள் எல்லாமாகத் திகழ்கிறவன் அவன், அதேசமயம், அந்தப் பொருள்களின் தன்மைகள் (குணங்கள், குற்றங்கள்) அவனைச் சாராது,

இப்படி எதைவிட்டும் நீங்காமல் எல்லாமாக இருக்கிறவன், பரந்து விரிந்த குணங்களைக்கொண்டவன், ஒப்பற்ற அந்தப் பெருமானை நாம் சேர்ந்தோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.