டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 2

சிவந்த தாமரையைப் போன்ற கண்களைக் கொண்டவன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

செ.குளோரியான்

என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீர்அலிரே!
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதி இனமே?

குயில்கூட்டங்களே,

நீங்கள் என்னோடு நெடுநாள் பழகியவர்கள், எனக்காக ஓர் உதவி செய்யமாட்டீர்களா?

என்னுடைய பெருமான், சிவந்த தாமரையைப் போன்ற கண்களைக்கொண்டவன், அவனிடம் என் சார்பாகத் தூது செல்லுங்கள், என் நிலைமையைச் சொல்லுங்கள், அதனால் உங்களுக்கு என்ன குறை வந்துவிடும்?

நான் எப்போதோ செய்த வினையாலே அவனது திருவடியின் கீழ் குற்றேவல் செய்ய முயலாமல் இருந்துவிட்டேன். இனியும் அவனைவிட்டு நான் விலகியிருக்கலாமா? அது முறையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.