டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும்
                                                                                    முனிவரும்
புனைந்த கண்ணி, நீர், சாந்தம், புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம்செய் ஞானத்து உன்பெருமை மாசு உணாதோ மாயோனே!
                                                                                     மாயோனே,

எண்ணிய அனைத்துப் பொருள்களுக்கும் வித்தானவனே, அவை பொருளாக மாறும்போது, தன்னுடைய தன்மையிலிருந்து சிறிதும் மாறுபடாமல் இருக்கிறவனே,

(ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருள் தோன்றும்போது, முதற்பொருள் சிறிதேனும் சிதைந்துவிடும், உதாரணமாக, மாவு குறைந்தால்தான் இட்லி வரும். ஆனால் இறைவனோ, அனைத்துப் பொருள்களுக்கும் காரணமாக அமைந்தும், தன்னுடைய தன்மையில் மாறாமல் இருக்கிறான்).

பல விண்ணோர்களும் முனிவர்களும் உன்னை எண்ணி நைந்து உள்ளே கரைந்து உருகுகிறார்கள், மாலைகள், நீர், சந்தனம், தூபம் ஆகியவற்றை ஏந்தி வந்து வணங்குகிறார்கள், மனத்தால் நினைக்கின்ற ஞானத்தையுடைய உன்னுடைய பெருமை இதனால் இழிவடையாதோ?

(உனக்குச் சமமானவர்கள் என்று யாரும் இல்லை, அப்படி யாராவது இருந்தால், அவர்கள்தானே உன்னை வணங்க வேண்டும், மற்றவர்கள் வணங்குவதால் உன் பெருமை குறைந்துவிடாதா?)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.