2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யார் இட்ட சாபம்: ரெத்தின.ஆத்மநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

யாரிட்ட  சாப  மிது   யாரறிவாரோ?எவர்க்கு  மிங்கு அமைதியில்லை ஏனதுதானோ?புத்தர் காந்தி நேருவென்று புகழிங்குண்டுபோனதுவே அத்தனையும் காற்றி லினின்று!தர்க்குரிகள் பலபேரின்று தலைவர் களானார்தன்குடும்பம் தன்னுறவை வளர்த்தே விட்டார்!மக்களிங்கு சொந்த நாட்டில் அகதிகளானார்மதிப்பிழந்து மனமொடிந்து மகிழ் விழந்தாரே!காட்டுமரம் ஆற்றுமணல் கடற்கரை மண்ணையும்காசாக்கிக்  கூட்ட  மொன்று  களிப்பாயிருக்கு!வாட்டுகின்ற   பசியினையும்   தாங்கிய   படிவறுமையிலே உழைக்கிதிங்கே ஒருசிறு கூட்டம்!படத்தினிலும் பாட்டினிலும் முகங் காட்டியேபடுஜோராய் வாழுதிங்கே மற்றொரு கூட்டம்!அரசு பெயர் சொல்லியபடி வேறொரு கூட்டம்அடிக்கு திங்கே லஞ்சங்களைக் கோடிகளாய்!கோயில் குளம் கொஞ்சுகின்ற ஆறுகளென்று குறைவின்றிச் செய்து வைத்தார் அரசர்களன்று!இருந்ததையும் கோட்டை விட்டே யாவருமின்றுஏழ்மையிலே உழல்கின்றார் இனிமையை விட்டு!நம்பியே    வாக்களித்த    மக்களை    யிங்கு நட்டாற்றில் விட்டு விட்டார் நயவஞ்சகர்களின்று!யாரிட்ட  சாப  மிது   யாரறிவாரோ?எவர்க்கு  மிங்கு அமைதியில்லை ஏனதுதானோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.