2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யார் இட்ட சாபம்: ஆர்.வித்யா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

மரம் வளர்த்தால் மழை பெறலாம் எல்லா மரத்தையும் வெட்டுவோம்- மழைக்கு இறைவனை வேண்டுவோம்.‘மணலைத்தோண்டினால் நீர் சுரக்கும்; மணலை சுரண்டினால் நீர் காணாது போகும்’அறிந்தபோதும் மணல்குவாரிக்கு மங்கலம் இசைப்போம்!‘புவியீர்ப்பைத் தாண்டினால் புது உலகம் கிட்டும்’புரிந்தபோதும் ஏவுகணை செய்து பக்கத்து நாட்டையே அழிப்போம்!அறிவால் அணுவைப்பிளந்து ஆராய்வோம்-பிளந்த அணுவால் பூவுலகை ஒழிப்போம்!அசல் சினிமாவையே கலையாக அறிவோம்ஆனபோதும் அரைகுறை சினிமாவையே கலையாக ரசிப்போம்.‘எது கலை’- ‘எது இலக்கியம்’ என்பது உறுதியாக தெரியும்அதற்கும் ஒதுக்கீடு செய்து கலையை களையாக்குவோம்?!‘நல்ல தொண்டனே நல்ல தலைவன்’ ஆயிரம் ஆண்டுக்கு முன்பே அறிவு பெற்றோம்அறிவைப்பெற்றும் ‘நேரடி’ தலைவனாகவே கனவு காண்போம்!‘தாவர உணவே தலை சிறந்தது’ஆனபோதும் உயிர்க்கொன்றே உடல் வளர்ப்போம்.மாற்று அறுவை சிகிச்சையில் மகத்துவம் நிகழ்த்துவோம் ;ஆறுரூபாய் குறைந்தாலும் ஆபரேஷனை நிறுத்துவோம்!சூரியனை இரவில் வெளிச்சம் தரும் சக்தியாக்குவோம் ;ஆனபோதும் வெளிச்சத்திலும் ‘இருட்டு’ வாழ்க்கை வாழ்வோம்.‘நமக்குள்ளே போனால் ஞானம் கிட்டும்’அறிவால் அடைந்த ஞானத்தையும் ‘நான்’ எனும் அகந்தையால் அழித்தோம்.மகத்தான அறிவும் பெற்று மடத்தனமாய் வாழும் வாழ்வு‘யார் இட்ட சாபம்?’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.