நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர்வற்றிய குளம்: ​கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வால்நெளித்து
வந்த மீன்கள் கிச்சுக்கிச்சு செய்து
அலைகளில் கவியெழுதி
ஆழத்தில் கண்ணாமூச்சி ஆடினவே....

மீனுக்குப் பொரிபோட்ட
அருளாளர்கள்
என்னை மறந்தனரே...

என்வருத்தம் உணர்ந்த
கரையோரத்து மரங்கள்
மலராடை அணிவித்து
மதிப்பூட்டினவே....

இன்று
மழைச்சொட்டு இல்லாமல்
நா(ன்) வறண்டு கிடக்கிறேனே....

நான்
தீர்ந்து போனதால்
திருக்கோயில் சாமிகளுக்குத்
தினக்குளியல் இல்லையாமே..

குடங்களைச் சாய்த்து
என்னை அள்ளி அணைத்து
இடையழகில் குழந்தையென அமர்த்தி
ஊர்வலம் சென்ற மென்மகளிர்கள்
இனி
எப்போது திரும்புவார்கள்?

என் மீது
அடுக்கு வீடுகள் கட்ட
நீள அகலம்
அளந்துவிட்டுப் போனார்களே
நேற்று.

குளமாக இருந்த என்னை
மட்டைப்பந்து களமாக ஆக்கி
விளாசுகிறார்களே
ஆறாக !

ஆறாக ஆசைப்பட்டு-
குளமாக வாழ்க்கைப்பட்டு-
களமாக வறுபட்டுக் கிடக்கும் என்னை....

எந்த இராமன் திருவடி மிதித்துக்
கங்கையின்
குழந்தையாக
உயிர்ப்பிப்பான்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.