நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: பூ. சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

அன்று
நீர் நிறைந்த குளத்தில்
துள்ளித் திரிந்த மீன்கள்
அல்லி மலர்க் கூட்டம்
இதழ் விரிந்த

தாமரை மொட்டுகள் 
அழகைக் கண்டு மகிழ்ந்த 
குளத்துப் படிக்கற்களே
இன்று 
நீர் வற்றிய குளம்
கண்டு ஏங்கி நிற்கின்றன !

அன்று
நீர் நிறைந்த குளத்தில்
நீச்சலடித்த சிறுவன்
பாசி படர்ந்த நீரில்
வீசியடித்த சிறுகல்
துள்ளித் துள்ளி ஓடுவதை
ரசித்து மகிழ்ந்த சிறுவன்
இன்று
நீர் வற்றிய குளம்
கண்டு ஏங்கி நிற்கிறான் !

அன்று
நீர் நிறைந்த குளத்தில்
வெண்மைப் படகுகள்
மிதப்பதைப்போல்
நீந்திய வாத்துக்கூட்டம்
இன்று
நீர் வற்றிய குளக்கரையில்
நீந்த ஏங்கி நிற்கின்றன !

அன்று
வாடிய பயிரைக் கண்டு
வாடி நின்றார் வள்ளலார்
இன்று
நீர் வற்றிய குளம்
நினைத்து பயிர்களே
வாடி ஏங்கி நிற்கின்றன !                                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.