நீர் வற்றிய குளம்: பூ. சுப்ரமணியன்


அன்று
நீர் நிறைந்த குளத்தில்
துள்ளித் திரிந்த மீன்கள்
அல்லி மலர்க் கூட்டம்
இதழ் விரிந்த
தாமரை மொட்டுகள்
அழகைக் கண்டு மகிழ்ந்த
குளத்துப் படிக்கற்களே
இன்று
நீர் வற்றிய குளம்
கண்டு ஏங்கி நிற்கின்றன !
அன்று
நீர் நிறைந்த குளத்தில்
நீச்சலடித்த சிறுவன்
பாசி படர்ந்த நீரில்
வீசியடித்த சிறுகல்
துள்ளித் துள்ளி ஓடுவதை
ரசித்து மகிழ்ந்த சிறுவன்
இன்று
நீர் வற்றிய குளம்
கண்டு ஏங்கி நிற்கிறான் !
அன்று
நீர் நிறைந்த குளத்தில்
வெண்மைப் படகுகள்
மிதப்பதைப்போல்
நீந்திய வாத்துக்கூட்டம்
இன்று
நீர் வற்றிய குளக்கரையில்
நீந்த ஏங்கி நிற்கின்றன !
அன்று
வாடிய பயிரைக் கண்டு
வாடி நின்றார் வள்ளலார்
இன்று
நீர் வற்றிய குளம்
நினைத்து பயிர்களே
வாடி ஏங்கி நிற்கின்றன !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...