நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: பாலா ஆர்.எம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

அண்ணார்ந்து பார்க்கிறேன்
மேகம் பக்கத்தில் தெரிந்தது
எட்டிவிடலாம் என எண்ணி
ஏமாந்து போனேன்.
மேகத்துடன் பேசி நண்பனாகிவிடலாம்
என்று தோன்றுகிறது
நண்பனாகிவிட்டால் அவனிடம்
கூறி மழையை கேட்கலாம் என பேராசை பட்டு
தோற்றுப்போனேன்
அவனும் என் பக்கம்
சேராமல் கதிரவனுடன்
கைகோர்த்து விட்டான்
படுபாவி !
மழை இல்லாமல் என் கிராம குளம்
நீர் இன்றி வாடுகிறது
மீனும் நீரின்றி சாகிறது
மாரி பெய்யும்
குளம் நிறையும்
மீன்கள் துள்ளி துள்ளி விளையாடும்
அந்த நாளுக்காக காத்திருந்தேன்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.