நீர் வற்றிய குளம்: ஆனந்த் சுப்ரமணியம்


குளம் பூமியின் அகம்
நீர் அதன் வளம்
நீரில்லா குளம்
உயிரில்லா ஜீவனுக்கு சமம்
நீரின் அவசியம் உணர்ந்த காலம்
குளங்கள் பிறந்த பொற்காலம்
குளங்களின் பராமரிப்பு தவறிய காலம்
அதற்கு மூடுவிழா நடத்திய காலம்
மனிதனின் சுய நலத்தால்
குளங்களை இழந்தோம்
மனிதனின் ஆணவத்தால்
குளங்கள் மறைந்தன
இன்னும் நல்ல உள்ளங்கள் இருப்பதால்
மறைந்த குளங்கள் மறு ஜென்மம் பெறுகின்றன
நீர் வற்றிய குளங்களின்
இன்றைய நிலை,
குப்பைகளின் தாய்வீடு
புது மாளிகைகளின் அஸ்திவாரம்
மனிதனின் வேண்டா தேவைகளுக்கு
புகலிடம்
வறண்ட பூமிப் பிளவுகலும்,
சறுகுகளும், சங்கமமாகும் இடம்
ஒன்றாய் பாடுபட்டு, தூர் வாரி,
இயற்கை வளத்தை காப்போம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...