நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: ஆனந்த் சுப்ரமணியம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

குளம் பூமியின் அகம்
நீர் அதன் வளம்

நீரில்லா குளம்
உயிரில்லா ஜீவனுக்கு சமம்

நீரின் அவசியம் உணர்ந்த காலம்
குளங்கள் பிறந்த பொற்காலம்

குளங்களின் பராமரிப்பு தவறிய காலம்
அதற்கு மூடுவிழா நடத்திய காலம்

மனிதனின் சுய நலத்தால்
குளங்களை இழந்தோம்

மனிதனின் ஆணவத்தால்
குளங்கள் மறைந்தன

இன்னும் நல்ல உள்ளங்கள் இருப்பதால்
மறைந்த குளங்கள் மறு ஜென்மம் பெறுகின்றன

நீர் வற்றிய குளங்களின்
இன்றைய நிலை,

குப்பைகளின் தாய்வீடு
புது மாளிகைகளின் அஸ்திவாரம்
மனிதனின் வேண்டா தேவைகளுக்கு
புகலிடம்
வறண்ட பூமிப் பிளவுகலும்,
சறுகுகளும், சங்கமமாகும் இடம்

ஒன்றாய் பாடுபட்டு, தூர் வாரி,
இயற்கை வளத்தை காப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.