காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

விடுதலைப் பெற்ற நாட்டில்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
பலவற்றிலிருந்து 
மக்களுக்குத் தேவைப் படுகிறது
விடுதலை.

வறுமைப் பிடியிலிருந்து
விடுதலைப் பெற வழியின்றி
வாடிக் கொண்டிருக்கிறார்கள்
பல கோடியர்.

அலுவல் பிடியிலிருந்து
அனேகருக்குத் தேவை
விடுதலை.

பசியிலிருந்து
மக்களுக்கு எப்போதும்
கிடைப்பதில்லை
விடுதலை.

விடுதலை நாளில் கூட
மக்களிடம் இருப்பதில்லை
விடுதலை உணர்வு.

அன்னியரிடமிருந்து
விடுதலைப் பெற்றிருந்தாலும்
அடிமைப் படுத்தியே 
மக்களை வைத்துள்ளார்கள்
அரசியல்வாதிகள்.

ஆங்கிலேயரைப் போலவே
ஆட்சியாளர்களும்
ஜனநாயகப் போர்வையில்
அதிகார ஆட்சிச் செய்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.