காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கூட்டிலே அடைபட்டு
குறுகிய எண்ணத்தை
மனதிலே வளர்த்து
தனக்கான அடையாளத்தை
இழந்து விட்டு
தன்னுடைய பண்புகளை
மறந்து விட்டு
கூண்டொன்றே வாழ்வென்று
நினைத்துக் கொண்டு
வாழ்ந்திருக்கும்
பறவை போல
நாட்டிலும் சிலருள்ளார்
தனக்கான வாழ்வதனை
பிறர் வகுக்கக் கொடுப்பார்
அவர் சிறகிருந்தும்
பறக்கப் பயப்படும்
பறவையாய் உள்ளார்

கூட்டைத் திறந்து விட்டாலும்
உலகறியா பறவையது
வெளிச் செல்ல பயப்படும்
அது தன் குணத்தை இழந்திடும்

குணம் மறந்து
வாழும் மனிதா
நமக்கான வாழ்வதனை
கொள்கையாய் நாம் வகுத்து
கட்டுண்டு வாழ்வதே
விடுதலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.