காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலாவிடு தூது: மீனாள் தேவராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

நிலா விடு தூது
காலையில் கண்படும் நீ
மாலையில் எங்கு செல்வாய்
மலையில் மறைந்திட்டாய் என 
மக்கள் நினைப்பர்
ஞாலம்விட்டுச் சென்ற என் 
கோலமணியிடம் நீயெனக்கு
மெல்லமெல்ல தூது சென்றதை 
யார் அறிவார்
மங்கையைக் கண்ட 
நாள் முதல் மதியிழந்தேன்
செவ்வாய் சீராளைக் காணாது 
கதியிழந்தேன்
பித்தம்கொண்டு அவளைக்காண 
திரிந்தழைகிறேன்
புத்தியில் புகுந்து விட்டாள் 
சித்தமும் தெளிவிழந்தேன்  
ஊனில் உயிரில் 
உணர்வில் கலந்ததால்
எனை வாட்டும் துன்பத்திற்கு அருமருந்தாய்
என்மனக்கண் நிறைந்தாளிடம் தூது செல் 
வானில் உலாவும் மங்கிய நிலவே
போனவளைக் கொண்டுவரத் தூது செல்லாய்! 
ஊன் கலந்தாளை என் உள்ளப்பயிர் செழிக்க
என் கையறுநிலை கூறிக் காதல் வாழ 
தேனிலாவைத் தேடி நிலாவே தூது செல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.